விபத்து

வாகனத்தில் அடிபட்டு

தவளையாய் தலை நசுங்கி

கிடப்பவன் யார்...? உயிர் இருக்கிறதோ ...

இருந்திற்றோ...?

இருப்பின் பிழைப்பனோ ..

மாட்டானோ .. ? எனக்கொன்றும்

இல்லை சித்தம் அதில் ......

அவன் சட்டைப்பை வெளித்துப்பிய ....

அலைபேசியிலும் .. அம்பது

ரூபாய் நோட்டிலும் ....

நிலை குத்தி நிற்கிறேன் நான்............

0 Responses
  • Followers