பின் நீயும்....
பால்யம் நீர்த்து பால் உணர்ந்த வயதிலாயிருந்தது ... உன் மீதான என் காதல்... மஞ்சனத்தி ,அரளி பூக்களோடு இருந்த நம் சிநேகிததில் ரோஜாக்கள் முகிழ்த்த தருணங்கள் அழகானவை ... உன் முதல் தாவணி வெட்க சிவப்பில் நிறம் மாறிய பூக்கள் இன்னும் சிவப்பை பூசியே பூக்கின்றன .. உன் சுவாசம் நிறைந்திருந்த என் சுவாச பையில் .. இன்னும் செலவளிக்கமலே இருக்கிறது .., உன் ஒரு துளி சுவாசம்... நாம் ரசித்த மஞ்சு விளைந்த மச்சுவும் .. முகில் அடைந்த நிலாவும் .. இன்றும் இருக்கின்றன... அன்றைய அழகில்லாமல் ... காத்திருத்தல் பணிக்கபட்டதால் .. காத்திருக்கிறேன் ... பின் எப்போதாவது திரும்பி வரும் ரோஜாக்களும்...சுவாசமும் மஞ்சுவும் நிலாவும் .. பின் நீயும்....
1 Response
  1. Anonymous Says:

    உன் சுவாசம் நிறைந்திருந்த
    என் சுவாச பையில் ..
    இன்னும்
    செலவளிக்கமலே இருக்கிறது ..,
    உன் ஒரு துளி சுவாசம்...

    ennoda favourite line,,see my orkut profile caption:-)


  • Followers