undefined
undefinedundefined
விழுது வழி ஒழுகும்
சூரியனை .. கையில் அள்ளி
பருகியபடி .. பிரபஞ்சத்தை
உனக்கு கை காட்டுகிறேன்........
நீயோ புன்னகைத்தபடி ....
ஒற்றை பூவை பரிசளிக்கிறாய்..
தர்கங்களையும் ........
கவிதைகளையும் அறிமுகபடுத்துகிறேன்.......
உனக்கு கர்வத்துடன்.........
நீயோ...... கண் மூடி இதழ்
குவித்து என் உச்சி முகர்கிறாய்........
உன் பூ விளக்கிய பிரபஞ்சத்தையும்
ஒற்றை முத்தம் உடைத்த
என் தர்க்கத்தையும் ........ பொறுக்கி
சேர்த்தபடி நான்........
உன் முந்தானை எடுத்து
எனை மூடுகிறாய் முழுவதும்.....
உன் இளஞ்சூடு கதகதப்பில்
இளகி....... உருகி .....
காணாமலே போயின
என் பிரபஞ்சமும் .. தர்க்கமும்........
undefined
undefinedundefined
பாச்சை உருண்டைகளுக்கிடையில்
பச்சையம் மாறாமல் கிடக்கின்றன...
உன் வியர்வை .., மஞ்சள்
வாசம் சுமந்த .....
உன் மடல்கள் .......
எனக்கு சிறகுகள் தந்து
வாழ்வாய் இருந்ததும்.......
என் சிறகுகள் வெட்ட
வாளாய் இருந்ததும்..........
உன்னை சுமந்த ........ உன்
மடல்கள் தான் ...
மீண்டும் ..மீண்டும் .. உன் மடல்
வாசிக்கும் தருணங்களில் ..,
பனி ஊசி சொருகும் .
இதய வலியை உனக்கெப்படி
உரைப்பது நான்...........
மௌனமாய் சுவாசம் நிரப்புகிறேன்..
உன் வியர்வை ..., மஞ்சள் வாசத்தை......
கனவுகளில் இன்றென்றும்
உலா வருகிறோம் ...
சிவப்பு தாவணியில் நீயும்...
அரும்பு மீசையுடன் நானும் ........
பச்சையம் மாறாமல்
நாளையும் கிடப்பில் இருக்கும்
உன் மடல்களும்..... என் கனவுகளும்..