உன்னை பிரஸ்தாபிக்க
சொல்கிறாய் என்னை....
நீயே என் காதலென்றும் ..
வாழ்வு .., முழுமை என்றும்..
இன்னபிற எல்லாமேன்றும்...
என் கருப்புக்கனவுகளுக்கும்
உன் மோகத்திற்கும் இடையில் ..........
நசுக்கி பிதுங்குகிறது ...
என் சுயம்...
குதிரை மனதினையும்
குருதி பாயும் குறிகளையும் சபித்தபடி .....
மௌனமாய் தலை கவிழ்ந்து
பிரச்தாபிக்கிறேன்'' ஆம் '' என்றே...
உப்புக்கரிக்கிறது
உன் சந்தோஷ முத்தம்....
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)