undefined
undefinedundefined

இடுக்காட்டின் கபால வீச்சத்துடன்
காற்றின் நிசப்தம் கிழிய ...
எனக்கு ஒப்பிக்கபட்டது
நேற்றைய மனிதர்களின்
எப்போதைக்குமான வாழ்வு ....
தலையின்றி வந்தவன் சொன்னான்
''' உம் வர்க்க ரீதியில் வழியிழந்தவன் ...
கூடவே ..தலையையும் ..'''
குருதி வழியும் யோனியுடன் ஒருவள்
'' பூக்கும் முன்னே புசிக்கப்பட்டவள்...
காயவில்லை இன்னும்
குருதி .. வலிக்கிறது''' என்றாள்
பல்லின்றி இளித்து ..சொல்லின
சில பல கிழங்கள் ...'
'எங்கள் சாவு நன்றென்றே ''''''
ஆண்களும் .., அடுப்பும்
பெரும் பயம் '' என்றாள்
பதட்டத்துடன் வந்த பெண்ணொருத்தி ...
'' எவளின் பாரமோ ..?
என் சதை தின்று
பாரம் குறைத்தன .. தெருநாய்கள்...''
விசும்பியபடி விளம்பியது பிஞ்சொன்று ....
மௌனமாய் தலை கவிழ்ந்தபடிகு
பூமியை வெறித்தவன் சொன்னான் ..
'' விலகி செல் .. இன்னும்
மிச்சம் இருக்கிறது எழுத வேண்டிய கவிதைகள் ...
''''' மனையும் .. மக்களும் ..
சுகமும் .. பணமும் ..
மிஞ்சும் கூகுரல்களுக்கிடையில்
யாரவன் எழுந்தோடியது ...?
கண்ணீர் விட்டு கதறியபடி ..
சுடுக்காட்டு சாம்பலை துடைத்தபடி ..?
சுடுக்கட்டு சிவனாய் இருக்குமோ ...?
எனில் .. ஒழிந்து போகட்டும் ..
விடியலில் வாழ்தியபடிக்கு
வெளியேறினேன் ....
''' நன்றே .. மரித்து போனீர்கள் ....
இனி குறையொன்றுமில்லை ...
எல்லாம் சுகமே ....''''
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)