undefined
undefinedundefined

எப்போது என்றே தெரியவில்லை ...
எப்போதும் என் கால்சட்டையில்
இருக்கும் .. பம்பரமும் .. கொலிகளும்
தொலைந்தது என்று ....
ஏனென்று புரியவில்லை .. இப்போதெல்லாம்
கிளிகளும் .. மைனாக்களும்
தட்டானும் .. பட்டம்பூசிகளும் ...
இன்னும் ...
சாரைக்குட்டிகளும் .., ஓந்தாந்கலும்
எனை பார்த்து பயபடுவதில்லை என்று ...
பெண்கள் அழகானதும் ...
உடைகள் சீரானதும் ...
ஐந்தறிவு ஜீவன்கள்பாவம் என்றானதும்
எப்போதென்றே தெரியவில்லை ....
யானைகளும் .. தேவதைகளும்
இப்போதொன்றும் கனவுகளில்
வருவதும், இல்லை ...
கண்ணாடியில் முகம் பார்த்து ..
மரு கிள்ளி... அரும்பு மீசை ஒதுக்கிய
ஒரு நாளில் மச்சி வீட்டு ஆச்சி
சிரித்தபடி கேட்டாள்...'
'
'என்ன பேரப்புள்ள ...
பெரியாளா ஆயிட்டிய.. போல இருக்கு ...?'''
புரிந்தும் புரியாமலும்
வெட்க்கதுடன் புன்னைகத்தபடி
படியிறங்கி போனேன் ....
பால்யத்தில் இருந்து .........
Subscribe to:
Post Comments (Atom)
mikka Arumai........Nanba