நேற்றிரவு கனவினில்
ஜனித்த கவிதையை காணோம்.....
படுக்கையின் கீழோ
மூளை..,மன அடுக்குகளின் கீழோ....
புதைந்து விட்டிருந்தது..
''டீ'' க்கு அழைத்த
நண்பனை திட்டி ....
பல் விளக்காமல்
பேந்த விழித்தபடி ........
மூளை மன அடுக்குகளை
புரட்டி போட்டிருந்தேன்..
ப்ரம்ம பிரயத்தனத்தில்
சிதைந்து ..சிக்கியது ....
கவிதை.... சீராக்கி ..
நேராக்கி படிக்கையில் ...
பெருமூச்சுடன் வெளிப்படும்
'' பேசாமல் ..
டீ அடிக்கவே..போயிருக்கலாம்....'''.
Subscribe to:
Post Comments (Atom)
i look uuuuuuuuuuuuuuuuuu