இறுதி தீர்ப்பு .........
மல்லாந்து படுத்திருக்கிறேன் உத்தரத்தை நோக்கி ..... தொங்குகிறது உத்தரத்தில் செத்து புழு வைத்த என் மனச்சாட்சி ......... பறந்து வந்த பறவை தன் அலகால் எனைக் கொத்தி தூக்கி .. இறுதி தீர்ப்பு நாளில் வீசி எறிந்தது......... மனசாட்சி கொன்ற பாவத்திற்கான வரிசையில் பெருங்கூட்டம் .தலை கவிழ்ந்து ,கண்ணீரோடு எம் பாட்டனும் முப்பாட்டன் மாரும் இன்ன பிற மான்புமிகுக்கலும் .. மான மிகுக்களும்.. தீர்ப்பு சொல்ல கடவுளை காணோம் ........ தேடி பார்க்க .. வரிசையின் ஓரத்தில் தலை முக்காடிட்டபடி கடவுள்....... சரிதான் என்று பறவை கொன்று தோளில்போட்டபடி பூமியில் குதித்தேன் ... மிச்சமிருக்கிறது இன்னும் வாழ்வு
0 Responses
  • Followers