undefined
undefinedundefined
பேசினோம் ... பேசினோம்
பேசிகொண்டே இருந்தோம் ....
நிற்கும் போது..
நடக்கும் போது
படுக்கும் போது ...
பே ....சிகொண்டே இருந்தோம் ...
ஆயினும் பேச வேண்டிய ஒன்றை
கவனமுடன் தவிர்த்தோம் ....
பிறகு பேசிக்கொள்ளலாம் என்று ...
பிறகு எப்போதும்
வாய்க்காமலேயே போயிற்று ..
அந்த '''பிறகு '''......
உனக்கு கணவனும்
எனக்கு மனைவியும்
வாய்த்த பின்னும் ...
இன்றும் அசை போடுவோம்
தவிர்த்த தருணங்களையும்
தவித்த வார்த்தைகளையும் ....
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)