காயாத யோனிகள்..
காயாத யோனிகள் எங்களுடையவை ..... பத்து நிமிடக் கணவர்கள் பலர் வந்து போகுமிடம்.... பல அடுக்கு அலங்காரத்தின் உள் ஒளிந்த எம் முகங்கள் உன் கவனத்திற்கு வராதவை .. சதை தின்ன வந்தவனுக்கு சாத்திரம் எதற்கு ..? சடவு தீர வந்தவனுக்கு மனப்புரிதல்கள் எதற்கு..? வாருங்கள் ... உங்கள் வக்கிரங்களையும் அழுக்குகளையும் கொட்டி நிரப்பி செல்லுங்கள் எங்கள் காயாத யோனிகளை .. ஆயினும் .. சதை தின்று .. சடவு தீர்த்து நெட்டி முறித்தபடி .. எமை வேசி என்றழைக்கும் போதுதான் கேட்க தோன்றுகிறது .. ' 'சரி.. உமெக்கென்ன பெயர்..? என்று
0 Responses
  • Followers