undefined
undefinedundefined
நீள் இரவின் அந்தகாரத்தில்
புரண்டு கொண்டிருந்தோம்
இருவரும் ..............
நிர்வாணமாக ....
முந்திய இரவில்
சுகித்ததின் தகிப்பு
இன்னும் மிச்சம் இருந்தது
நம் உடலில் .......
'' காமம் தவறா..? '' என்றாய் ..
திடுக்கிட்டு விழித்தேன் ..
அகங்கார உலகம் தன்
அகண்ட வாய் பிளந்து
உன்னை விழுங்கி கொண்டிருந்தது ....
தடுக்க எத்தனிக்க ..
''' நடத்தை கெட்டவள் '''' என்று
காரணித்தது....
ஆண் என்னும் கவுரவத்தில்
வெளியேறி ...
அலைந்து திரிகிறேன் நான் ....
இன்னுமொரு '''''' நடத்தை கெட்டவளுக்காய்''''''
0 Responses
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)